News Just In

4/07/2022 11:46:00 AM

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இப்தார் நிகழ்வு.



நூருல் ஹுதா உமர்

"சகோதரத்துவம் மற்றும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துதல்" எனும் தொனிப்பொருளில் கிழக்கு பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்த இப்தார் (நோன்பு திறக்கும்) நிகழ்வு புதன்கிழமை மாலை நடைபெற்றது.

முஸ்லிம் மஜ்லிஸ் சிரேஷ்ட பொருளாலரும் விரிவுரையாளருமான ஏ.எல்.எஸ்.சாபித் தலைமையில், வந்தாறுமூலையில் அமைந்துள்ள பிரதான வளாக நல்லையா ஞாபகார்த்த கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர். வ. கணகசிங்கம் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், கலை கலாசார பீட பீடாதிபதி கலாநிதி. ஜே. கெண்னடி கௌரவ அதிதியாகவும், பதிவாளர் ஏ.பகிரதன் மற்றும் நிதியாளர் எம்.எம்.எம்.பாரிஸ் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அஷ்ஷெய்ஹ். ஏ.எம்.அக்றம் (நழீமி) சிறப்புரையாற்றிய இந்நிகழ்வில் விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக ஊழியர்கள் அத்துடன் மாணவர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




No comments: