News Just In

3/31/2022 06:09:00 PM

அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கௌரவிப்பு !




எம்.என்.எம்.அப்ராஸ்
கல்முனை அல் -மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில்தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து வெட்டுப் புள்ளிக்கு மேல் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.

இந் நிகழ்வானது பாடசாலையின் அதிபர் எம்.ஐ. அப்துல் ரஸாக் அவர்களின் தலைமையில் பிரதி அதிபர் ஐ.எல்.எம். ஜின்னாஹ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றதுடன் பிரதம அதிதியாக தென்கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் ஏ.எம்.றஸ்மி,அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பதக்கங்களும் பரிசில்களும் வழங்கி கௌரவித்ததுடன் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.







No comments: