News Just In

3/08/2022 10:15:00 AM

சூடு பிடிக்கும் கொழும்பு அரசியல்! - அரசுக்கு எதிராக புதிய கூட்டணி!

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகள் தற்போது புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன அல்லது சந்திரிகா பண்டாரநாயக்கா இந்த புதிய கூட்டணிக்கு தலைமை தாங்குவர் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அரசில் முக்கிய பங்கு வகித்த அமைச்சர்கள் அண்மையில் பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களும் அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.மேலும், அமைச்சர்களுடன் கலந்துரையாடாமல் ஜனாதிபதி தீர்மானங்களை மேற்கொள்வதால், அமைச்சுக்களை இழந்தாலும் இழப்பதற்கு இனி எதுவுமில்லை என அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாங்கள் இரண்டாம் தரத்தினராக உணர்வதாகவும் கூட்டணி அமைப்பதற்கான கலந்துரையாடலில் ஈடுபட்டுவருவதாகவும் அதுவும் நிச்சயம் நடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.



No comments: