News Just In

3/10/2022 06:44:00 AM

பலூன் விற்ற பெண் மோடல் அழகியான சம்பவம்!

அழகு என்பது வெளிப்பூச்சு இல்லை. அகத்தின் ஒளி. இதனை நம் கண் முன்னே உண்மையாக்கும் நிகழ்வு ஒன்று அரங்கேறியிருக்கிறது.

கேரளாவின் அண்டலூர் கோவில் திருவிழா வருடத்திற்கு ஒருமுறை கோலாகலமாக நடைபெறக் கூடியது. புகைப்படக் கலைஞர் அர்ஜுன் கிருஷ்ணன் திருவிழாவின் தெருக்களில் அலைந்து திரிந்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தபோது, பலூன் விற்கும் ஒரு பெண் எதேர்ச்சையாக அவருக்குத் தென்படுகிறார்.

அந்தப் பெண்ணைத் தன்னுடைய கேமரா கண் வழியே பார்த்திருக்கிறார் அர்ஜுன். அங்கு எடுத்த இரண்டு மூன்று புகைப்படங்களை அவர் இஸ்டாவில் பதிவிடவே அதற்கு குவிந்த ஹார்டுகளில் திக்குமுக்காடி போயிருக்கிறார். அந்தப் பெண்ணின் பெயர் கிஷ்பூ.

கிஷ்பூவின் புகைப்படங்களையும் அதற்கான வரவேற்பையும் கிஷ்பூவுக்கும் அவரது பெற்றோருக்கும் காட்டி சம்மதம் பெறவே போட்டோ சூட் வேலைகள் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ரெம்யா பிரஜூல் மேக்கப் செய்யும் பணியை மேற்கொண்டிருக்கிறார். அதிகாலை 4 மணிக்குத் தொடங்கி மெனிக்யூர். பெடிக்யூர், பேஷியல் எல்லாவற்றிற்கு பிறகு போட்டோ சூட் நடந்திருக்கிறது.




No comments: