News Just In

2/07/2022 07:52:00 PM

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன!

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருவாய் தரும் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட நலன்புரிச்சங்கத்தினால் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லம்பத்தை, கட்டுக்குளம், மதுரங்குடா ஆகிய கிராமங்களில் உள்ள மூன்று பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவித்திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இதனை திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத் தலைவர் ச.குகதாசன், செயலாளர் க.சிவானந்தன், கணக்காளர் ச.பாரதிநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர். நிகழ்வுகளை படங்களில் காணலாம்.

எப்.முபாரக்





No comments: