News Just In

2/01/2022 07:28:00 PM

நாட்டில் மேலும் 32 பேர் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி நேற்றைய தினம் 32 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். அதன்படி, நாட்டில் இதுவரை 15,473 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, கொவிட் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த 417 பேர் இன்றைய தினம் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 578,849 பேர் பூரணமாக குணமடைந்து வௌியேறியுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 611,185 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: