மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கலடி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி குறித்த 02 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.34 , 39 வயதுடைய களுத்தாவளை மற்றும் களுவன்கேணி பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
செங்கலடி பொதுச்சந்தை கட்டிடத்தில் நேற்றிரவு இரகசியமான முறையில் சுமார் 3இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 01கிலோ கஞ்சா பொதியை விற்பனை செய்யமுயன்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை சுற்றிவளைத்த செங்கலடி இராணுவ புலனாய்வு பிரிவினர், விசேட அதிரடிப் படையினரினரிடம் இவர்களை ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
|
No comments: