2022ம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் தொடர்பாக பெற்றார்களுக்கு அறிவுறுத்தும் கூட்டம் இன்று (30.01.2022) EDS இன் சிவநேசராசா மண்டபத்தில் நடைபெற்றது. கனடாவில் உயர் கல்வியுடனான தொழில் வாய்ப்பை பெறுவதற்கான ஆலோசனை வழிகாட்டல்களை வழங்கும் "HECS" நிறுவனத்தின் நிதி அனுசரனையில் இவ்வகுப்பு நடைபெற உள்ளதாக ஏற்பாட்டாளர்களினால் தெரிவிக்கப்பட்டது.
வார இறுதிநாள் வகுப்புகளுடன் மாதம் தோறும் மாதிரி பரீட்சைகளும் நடைபெறுள்ளதாகவும், சிறந்த வளவாளர்களின் வழிகாட்டுதலில் மேற்படி வகுப்புக்கள் எதிர்வரும் சனிக்கிழமை (05.02.2022) அன்று ஆரம்பமாக உள்ளதாகவும் கருத்து முன்வைக்கப்பட்டது. மேலும் HECS நிறுவனத்தால் மாணவர்களுக்கான ஆங்கில வகுப்புக்களும் குறைந்த கட்டணத்தில் நடைபெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்களினால் கூறப்பட்டது.
No comments: