நத்தார், புத்தாண்டு கொண்டாட்டங்களை மேற்கொள்ள மக்கள் திட்டமிட்டு வருகின்ற நிலையில், அவற்றை இரத்து செய்யுமாறு உலக சுகாதார அமைப்பின் (WHO) செயலாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் (Tedros Adhanom Ghebreyesus) வேண்டுகோள் விடுத்துள்ளார்.உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தி முடிவுக்கு கொண்டு வர பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
நத்தார், புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி உலகமெங்கும் உள்ள மக்கள் விடுமுறை கொண்டாட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டு வருகின்ற நிலையில், அவற்றை இரத்து செய்யுமாறு WHO வின் செயலாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், 'வாழ்க்கையே இரத்தாகி விடுவதைவிட ஒரு நிகழ்வு இரத்து செய்யப்படுவது சிறந்தது. இப்போது கொண்டாடி பின்னர் வருத்தப்படுவதை விட, கொண்டாட்டங்களை இரத்து செய்துவிட்டு பின்னர் கொண்டாடலாம். 2022ஆம் புத்தாண்டில் கொரோனா பெருந்தொற்றை முடிவுக்கு கொண்டு வருவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
No comments: