News Just In

12/12/2021 06:48:00 PM

கவிதை நூல் நூல் வெளியீடு!




இலக்கியமணி கலாபூஷணம் கவிஞர் ஏ.சி. அப்துல் றஹுமான் எழுதிய அக்கரைப்பச்சை எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா ஏறாவூர் வாவிக்கரையோரம் அமைந்துள்ள கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் பஷீர்சேகுதாவூத் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் வி. நிஹாறா மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஜெலீலா முஸம்மில் ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழிம் பிரதித் தவிசாளர் எம்.எல். றெபுபாசம் உட்பட இன்னும் பல அதிகாரிகள் எழுத்தாளர்கள் ஆர்வலர்கள் கலைஞர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அக்கரைப்பச்சை எனும் இந்த நூல் கதாசிரியரின் மூன்றாவது வெளியீடாகும். அகில இந்திய தேச பிதா விருது விழாவிலும் கௌரவிக்கப்பட்டுள்ள கவிஞரும் சிறுகதை எழுத்தாளரும் ஹாஷ்ய நடிகருமான அப்துல் றஹுமான் இதற்கு முன்னர் கூடிழந்த குருவிகள் எனும் சிறுகதைத் தொகுதியையும் “மாறாத் துயரம்” எனும் நூலையும் வெளியிட்டு பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.“எளிமையே எங்கள் நபியின் வெற்றிப் படிகள்” எனும் இவரது கவிதை தேசிய ரீதியில் முதலாமிடத்தை தக்க வைத்து விருதுகளையும் பெற்றுக் கொண்டது.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்





No comments: