அண்மைக்காலமாக ஏற்பட்டுவரும் அசாதாரண சூழ்நிலை மற்றும் நீண்ட கால தேவைப்பாடாக உள்ள உளவளத்துணையாளர்களின் சேவைகளை ஒருமுகப்படுத்தி வலைப்பின்னலாக்கும் நோக்கில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள உளவளத்துணையாளர்களை ஒன்று படுத்தும் நிகழ்வு திருகோணமலை மாவட்ட எஹேட் ஹரிதாஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் பணிப்பாளர் அருட்தந்தை டன்ஸ்டன் அவர்களின் தலைமையில் கிண்ணியா பிரதேச செயலாளர் .எம்.ஏ.அனஸ் அவர்கள் அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வு இன்று (10) வெள்ளிக்கிழமை மாலை கிண்ணியா பொது நூலக மண்டப கோட்போர் கூடத்தில் இடம் பெற்றது .
இதன்போது உளவளத்துணையின் அவசியம் குறித்து பணிப்பாளர் சுட்டிக்காட்டியதுடன் பிரதேச செயலாளர் ஒன்றினைந்த கூட்டுச் செயல்பாட்டின் அவசியம் பற்றி குறிப்பிட்டதுடன் கலந்து கொண்ட உளவளத்துணையார்களுடன் எதிர் காலத்தில் எவ்வாறு செயற்படுவது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவுக்குமான தற்காலிக தொடர்பாளர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் ஒரு வாரகாலத்தினுல் அனைத்து பிரதேச செயலக பிரிவையும் உள்ளடக்கிய மாவட்ட நிர்வாகம் தெரிவுசெய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் போது 35 க்கும் மேற்பட்ட உளவளத்துணையாளர்கள் கலந்து கொண்டனர்
குறித்த இந் நிகழ்வில் எஹேட் ஹரித்தாஸ் நிறுவனத்தின் முகாமையாளர் பிரான்சிஸ் திட்ட இணைப்பாளர் றிஸ்மி கிண்ணியா ஜம்மிய்யத்துல் உலமா சபை தலைவர் அஷ்ஷேய்ஹ் ஏ.எம்.ஹிதாயதுல்லாஹ் நளீமி, மாவட்ட செயலக உள சமூக உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஷம்சீத் மற்றும் உளவளத்துணையாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
No comments: