கொழும்பு-திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு பிரதான வீதியில் அமைந்துள்ளநாவலடி ஆயுர்வேத மத்திய மருந்தகத்தின் நீண்ட நாள் தேவையாகக் காணப்பட்ட அலுவலக தளபாடங்கள் குறைபாட்டைக் கடந்த வாரம் கத்தார் நாட்டிலில் இருந்து கொண்டு பல்வேறு உதவிகளை செய்து வரும் தனவந்தர் ரமீஸ் அவர்களிடம் இவ்மத்திய மருந்தகத்தின் பொறுப்பதிகாரி வைத்தியர் எம்.றிக்காஷ் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இன்று 27.12.2021 திங்கட்கிழமை மத்திய மருந்தகத்தில் காலை 10.30 மணிக்கு அலுவலகப் பொருட்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு வைத்தியசாலையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் நான், ரமீஸ் நானா, அமைப்பின் செயலாளர் சாஜகான் மற்றும் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலய அதிபர் சாபீர் மற்றும் ஓய்வு பெற்ற முன்னால் அதிபர் சுபைதீன் மற்றும் அவ்வமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக வைத்திய பொறுப்பதிகாரி எம்.ரிக்காஷ் அவர்களிடம் பொருட்களை கையளித்தனர்.(Office Table,Plastic Chair -06,Rotate Chair-01,Cupboard-01)
இதன் போது கருத்து தெரிவித்த வைத்தியசாலை பொறுப்பதிகாரி அவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு நற்பணிகளை மேற்கொண்டு வரும் சகோதரர் ரமீஸ் அவர்கள் நான் விடுத்த கோரிக்கைக்கு விரைவாக செயற்பட்டு எமது வைத்தியசாலை குறைபாடுகள் நிபர்த்தி செய்தமைக்கமய நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார். அத்தோடு எதிர்வரும் காலங்களிலும் சகோதரர் ரமீஸ் அவர்களின் சமூக சேவைப் பணிகள் மென்மேலும் வளர்ச்சி அடைய பிரார்த்திக்கின்றோம்.
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
எஸ்.ஐ.எம்.நிப்ராஸ்
No comments: