எச்.எம்.எம்.பர்ஸான்
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.இயந்திரப் படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் நேற்று மாலை (26) மீன் பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்றுள்ளனர்.
இவ்வாறு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் ஒருவரே நேற்று ஆழ்கடலில் வைத்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது ஏனைய மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை அஸன் பாவா வீதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய முகம்மது இஸ்மாயில் பாரூக் என்பவராவார்.
No comments: