நேற்றைய தினம் இரத்தினபுரி நகரில் எரிபொருள் விலை அதிகரிப்பு, விலைவாசி உயர்வுக்கு எதிராகவும் மக்கள் விடுதலை முன்னணி(JVP) ஏற்பாடு செய்த மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் இரத்தினபுரி மாவட்ட தலைவர் சாந்த பத்மகுமார மற்றும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப், முன்னாள் பாராளுமன்ற வேட்பாளர் மாணிக்கம் அசோக்குமார் உட்பட நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: