எஸ்.எம்.எம்.முர்ஷித்
பிரம்புகள், பித்தளை, மண்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு முயற்சியாளர் என்னும் செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் பிரதேச செயலகம் தோறும் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் ஏறாவூர்நகர் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தின் ஏற்பாட்டில் பயனாளிகளுக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு ஏறாவூர்நகர் செயலகத்தில் இடம்பெற்றது.
ஏறாவூர்நகர் பிரதேச செயலாளர் திருமதி.நிஹாரா மௌஜீத் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதேச ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான ஹாபிஸ் நஸீர் அஹமட், உதவித் திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட விதாதா உத்தியோகத்தர்கள், பதவிநிலை உத்தியோகத்தர்கள், விதாதா வள நிலைய உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டார்.
இதன்போது பிரம்புகள், பித்தளை, மண்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் 1.658 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு முயற்சியாளர் என்னும் செயற்றிட்டத்தில் 19 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 11 பயனாளிகளுக்கு தொழில் முயற்சிக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது பிரம்புகள், பித்தளை, மண்பாண்டங்கள், மரப் பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சின் 1.658 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் ஒரு கிராம சேவகர் பிரிவுக்கு ஒரு முயற்சியாளர் என்னும் செயற்றிட்டத்தில் 19 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு முதற்கட்டமாக 11 பயனாளிகளுக்கு தொழில் முயற்சிக்கான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கப்பட்டது.
No comments: