News Just In

12/12/2021 08:24:00 AM

குடி நீர் வசதிகளின்றி சிரமப்படும் ஹிஜ்ரா நகர் கிராம மக்கள்!

ஓட்டமாவடி பிரதேச சபை பிரிவிலும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலும் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியை அன்டியதாக உள்ள கிராமமே ஹிஜ்ரா நகர் கிராமமாகும்.

இக் கிராமத்தில் முன்நூறு குடும்பங்களை சேர்ந்த 1064 நபர்கள் வாழ்ந்து வருகின்றனர் இவர்களது பிரதான தொழில் கால்நடை வளர்ப்பு, வீட்டுத் தோட்டம் மற்றும் கூலித் தொழிலாகும்.

இப் பகுதி மக்கள் தங்களுக்கான குடி நீர் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மிகவும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இவர்களுக்கு அரசாங்கத்தினாலும் தொண்டு நிறுவனங்களினாலும் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதனுடாகவும் தங்களது தேவைக்கான நீர் இல்லாமல் மிகவும் சிரமமப்படுகின்றனர்.

இவர்களின் குடி நீர் பிரச்சினையை ஓரளவு தீர்க்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் வாகனத்திற்கான டீசலுக்கான கொடுப்பணவு வழங்கப்பட்டு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆளனி மற்றும் வாகனத்தின் ஊடாக பிரதேச சபை எல்லைக்குள் உள்ள தண்ணீர் தட்டுப்பாடாக உள்ள பிரதேசங்களுக்கு வாரத்திற்கு ஒரு முறை குடி நீர் வழங்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு வழங்கப்படும் நீரும் மழை காலம் ஆரம்பித்தால் வழங்குவது நிறுத்தி விடுகின்றார்கள் கிணறு இல்லாத நாங்கள் நீர் வழங்குவதனை நிறுத்தினால் நீருக்கு என்ன செய்வது என்று பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மழை பெய்யும் போது மழை நீரை சேமித்து பாவித்து வந்தோம் இந்த வருடம் மழையும் குறைவு. அதனால் குடிப்பதற்குக்கூட நீர் இல்லாமல் நாங்கள் மிகவும் சிரமமப்படுகின்றோம் என்று தெரிவிக்கின்றனர்.

மழை பெய்ய ஆரம்பித்ததுடன் எங்களுக்கான குடி நீர் வழங்குவதனை நிறுத்தி விட்டார்கள் முறையான மழை வீழ்ச்சியும் எங்களது பகுதியில் இல்லாததால் கிணறுகளிலும் நீர் வற்றிக் காணப்படுகின்றது.

நீருக்காக நாங்கள் மிகவும் கஸ்டப்படுகின்றோம் எங்களுக்கு நீர் தொடர்ந்து கிடைப்பதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஹிஜ்ராநகர் மக்களின் குடி நீர் வினியோகம் நிறுத்தப்பட்டது தொடர்பாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபரிடம் வினவியபோது.
பிரதேச சபையினால் எங்களது பிரதேச எல்லைகளில் உள்ள வறட்சியான கிராமங்களுக்கு கோடை காலத்தில் பிரதேச செயலகத்தினால் வாகனத்திற்கான போக்குவரத்திற்காக வழங்கப்படும் டீசலுக்கான கொடுப்பணவு வழங்கப்பட்டு ஓட்டமாவடி பிரதேச சபையின் ஆளனி மற்றும் வாகனத்தின் ஊடாக குடி நீர் வழங்கப்பட்டு வருவது வழக்கம் தற்போது மழை பெய்ய ஆரம்பித்ததும் பிரதேச செயலகங்களினால் வழங்கப்படும் டீசலுக்கான கொடுப்பனவு நிறுத்தப்பட்டதாக எங்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கான குடி நீர் வழங்குவதனை நிறுத்தியுள்ளோம். இருந்தும் குறித்த பகுதிகளில் தொண்டு நிறுவனங்களுக்கூடாக சில இடங்களில் ஆழ்துளை கிணறுகளை அமைத்து வருகின்றோம்.

எதிர்காலத்தில் தேசிய நீர் வடிகாலமைப்பு சபையின் குடி நீர் திட்டமும் அப் பகுதியில் வழங்குவதற்கான நடடவடிக்கைகளை பிரதேசபை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

எஸ்.எம்.எம்.முர்ஷித் 







No comments: