News Just In

12/25/2021 01:31:00 PM

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம்


எஸ்.எம்.எம்.முர்ஷித்
கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.சி.ஐயூப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எம்.எம்.றபீக், அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திலுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களின் கற்றல் நடவடிக்கையினை மேம்படுத்தும் நோக்கில் கல்வி உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எம்.எம்.றபீக் தெரிவித்தார்.



No comments: