News Just In

12/10/2021 07:06:00 PM

தென்னை பயிர்செய்கை மூலம் வருமானமாக 900 டொலர் மில்லியன் கிடைக்கப்பெற்றுள்ளது - இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பர்ணான்டு


தென்னை பயிர்செய்கை மூலம் வருமானமாக 900 டொலர் மில்லியன் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் காரணமாக வெளிநாட்டு வருமானம் குறையும்போது. தென்னைப் பயிர்செய்கை மூலம் வெற்றி பெற்றுள்ளது. இதனை நினைத்து நாம் பெருமிதம் அடைகின்றோம். சாதாரணமாக வருமானம் ஆண்டிற்கு 2.8 மில்லியன் வருமானம் கிடைக்கின்றது. 1.8 மில்லியன் அன்றாட தேவைகளுக்காக பயன்ப்படுத்தப்படுகின்றது. மிகுதியாக உள்ள சிறு தொகையானது மட்டுமே வெளிநாடுகளுக்கு அனுப்பி அதன் மூலம் வருமானம் கிடைக்கின்றது.

என தென்னை கித்துள் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பர்ணான்டு தெரிவித்துள்ளார்.செத்சிறிபாயவில் அமைந்துள்ள அமைச்சில் வைத்து வியாழக்கிழமை(09) பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்துவிட்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…

அந்நிய செலவாணி குறைவாக செல்வதால் இளம் விவசாயிகளுக்கு தென்னை பயிர்களை கையளித்து அதன் வருமானத்தை அதிகரித்து தொழில் வாய்ப்பு இல்லாத இளைஞர் யுவதிகளுக்கு அவர்களின் விருப்பத்திற்கு இணங்க அவர்களை தெரிவு செய்து. இலங்கை முழுவதும் உள்ள பிரதேச செயலகத்தை தெரிவு செய்து புதிய தென்னை பயிர்களை தெரிவு செய்து ஒன்று அல்லது இரண்டு நிலையங்களில் பயிர்செய்கையை மேற்கொள்வது எனது இலக்காகும். இந்த வேலைத்திட்டமானது கிராமத்துடன் இணைந்து கப்ரூக சமூர்த்தியின் ஊடாக 100 ரூபாவை செலுத்தி உறுப்பினராகினால் 5000 தென்னை விதைகளை வாங்கலாம். இதனை தென்னை பயிர் செய்கையை மத்திய நிலையமாகும் மேற்கொள்கின்றது.

ஒரு தென்னம் பிள்ளையானது 150 ரூபாயாகும். வடமாகாணத்தில் இவ்வேலைத்திட்டமானது நடைப்பெற்றது. தொடர்ந்து வரும் காலங்களில் கிழக்கிலும் நடைபெறும். தென்னை கித்துல் செய்கை மேம்பாட்டு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் மேலும் உற்பத்தி செய்து ஏற்றுமதி மேம்படுத்தப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன்          




No comments: