News Just In

12/25/2021 06:55:00 AM

மூதூர் நகரின் 64ஆம் கட்டையில் உள்ள மலையடி பிள்ளையார் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட புத்தர் சிலை!

திருகோணமலை மாவட்டம் மூதூர் ந்கரின் 64ஆம் கட்டையில் உள்ள மலையடி பிள்ளையார் சிலைக்கு மேல் புத்தர் சிலை வைக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருந்து.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று  (25-12-2021) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது, மூதூர் 64ஆம் கட்டையில் உள்ள மலையடி பிள்ளையார் சிலைக்கு மேல் திடிரென கடந்த (23-12-2021) புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை காலை 09.00 மணியளவில் 64ஆம் கட்டை மலை பிள்ளையாருக்கு முன் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.

எனவே, குறித்த பகுதிக்கு சைவசமய நலன் விரும்பிகள் வருகை தந்து போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு, ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

No comments: