News Just In

12/31/2021 06:22:00 AM

நயினாதீவு வடக்கு பகுதியில் நேற்று வீசிய கடும் காற்று காரணமாக ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணம் - நயினாதீவு வடக்கு பகுதியில் இன்று வீசிய கடும் காற்று காரணமாக ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

கடும் காற்று காரணமாக மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சேத விபரங்கள் தொடர்பில் வேலணை பிரதேச செயலகத்தினூடாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

No comments: