News Just In

12/21/2021 06:21:00 AM

சாரணஆசிரியர்களுக்கான கலைக்கூறு 11 (Phase -11) பயிற்சிநெறி

மட்டக்களப்பு மாவட்ட சாரண சங்கத்தின் ஏற்பாட்டில் தேசிய சாரண தலமையகத்தின் அனுமதியுடன் சாரண ஆசிரியர்களுக்கான கலைக்கூறு 11 (Phase -11) பயிற்சிநெறி கடந்த ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் தேசகீர்த்தி. வே.பிரதீபன் தலமையில் நடைபெற்ற இப்பயிற்சி நெறிக்கு பரமானந்தம்- அஜித் குமார் அவர்கள் பயிற்சித்தலைவராக பணியாற்றினார். மட்டக்களப்பு மாவட்ட பயிற்சிக்கான உதவி மாவட்ட ஆணையாளர் ஆ.உதயகுமார் அவர்களின் ஒழுங்கமைப்பில் இது நடைபெற்றது.

மாவட்ட பயிற்சிக்குழு உட்பட வளவாளர்கள் கலந்து கொண்டனர். மாட்ட சாரண வளர்ச்சிக்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட ஆணையாளர் குறிப்பிட்டதாக ஊடகத்திற்குப் பெறுப்பான உதவி மாவட்ட ஆணையாளர் ஆ.புட்கரன் தெரிவித்தார்.

.எச்.ஹுஸைன் 

No comments: