News Just In

11/16/2021 09:04:00 PM

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீட் காலமானார்!

திருகோணமலை மாவட்டம் சின்னக் கிண்ணியாவை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட மர்ஹூம் முத்தலிப் சேமனின் மகனும் , ஓய்வு பெற்ற ஆசிரியரும் , தினகரன் பத்திரிகையின் திருமலை மாவட்ட விசேட நிரூபரும், கலாபூசணம் சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எம்.ஏ.பரீட் வயது(64) இன்று(16) மாலை திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைத்து காலமானார்.

41 வருட ஊடக அனுபமிக்கவருமான அன்னார் தமிழ் மிரர்,தினகரன் பத்திரிகையின் பிராந்திய ஊடகவியலாளராக திறம்பட பணிபுரிந்துள்ளார். அன்னார் கபூர்நிஸாவின் அன்புக் கணவரும் இம்ரான், இஹ்ஸானா (சட்டத்தரணி), இஜாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். யாஅல்லாஹ் மரணித்த அன்னாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து உன் மேலான ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவாயாக ஆமின் ஆமின் யாரப்பல் ஆலமின் உங்கள் தூஆவிலும் சேர்துக் கொள்ளுங்கள் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை வழங்குவாயாக ஆமீன்!

தகவல் மகன் இம்ரான் பரீட்

No comments: