திருகோணமலை – கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பாலப்பகுதியில் மாணவர்கள் மற்றும் முதியவர்கள் அடங்கலாக 20 பேரை ஏற்றிச் சென்ற படகுப்பாதை ஒன்று கவிழ்ந்ததில் மாணவர்கள் சிலர் காணாமற்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்த நிலையிலேயே பலர் நீரில் மூழ்கினர். இதில் இதுவரை 06பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்கள், முதியவர்கள் பலர் பயணம் செய்த நிலையில் இவ்விபத்து சம்பவித்திருக்கிறது. இவர்களில் 07 பேர் மீட்கப்பட்டுள்ளனர். காப்பற்றப்பட்டவர்கள் எம்பியூலன்ஸ் மூலமாக கிண்ணியா தள வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார்கள்.
No comments: