News Just In

8/23/2021 08:24:00 PM

கிண்ணியா தள வைத்தியசாலை சம்மந்தமான கலந்துரையாடல்...!!



(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கிற்கும், கிண்ணயா தள வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ. எம். ஜவாஹீர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு கிண்ணியாவில் பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் இன்று(23) நடைபெற்றது.

இதன் போது கிண்ணியா தள வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் வைத்திய அத்தியட்சகர் தெளிவுபடுத்தினார்.

அத்தோடு வைத்தியசாலையின் வாட்டுத் தொகுதிகளை மேம்படுத்துவது தொடர்பாகவும் பேசப்பட்டதோடு,பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியசாலையின் தேவைகள் குறித்தும் இதன் போது கேட்டறிந்து கொண்டார்.

No comments: