News Just In

8/10/2021 09:18:00 AM

வாழைச்சேனை மக்கள் வங்கியில் கடும் கட்டுப்பாட்டுடன் சேவைகள் முன்னெடுப்பு...!!


(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரோனா தொற்றிலிருந்து வங்கி ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும் பாதுகாக்கும் வகையில் வாழைச்சேனை மக்கள் வங்கியின் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், திங்கட்கிழமை (9) குறித்த வங்கியில் கொரோனா தொற்று நீக்கம் செய்யப்பட்டது.

வங்கி முகாமையாளர் டி.தனசாகரன் வழிகாட்டலில் வங்கி ஊழியர்கள் முழு சுகாதார பாதுகாப்புடன் தங்களது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன், வங்கித் தேவைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை சுகாதார வழிமுறைகளை பேணியவாறு வங்கியினுள் அனுமதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




No comments: