News Just In

8/21/2021 07:16:00 PM

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி பகுதியில் கைக்குண்டு மீட்பு...!!


மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவலடி கடற்கரை பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக் குண்டொன்று இன்று(21) சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது.

நாவலடி கடற்கரைக்கு அண்மித்த சவுக்குக் காட்டுப்பகுதியில் குறித்த குண்டு கைவிடப்பட்ட நிலையில் இராணுவத்தினரிற்கு கிடைத்த தகவலையடுத்தே குறித்த குண்டை மீட்டுள்ளதுடன், இராணுவத்தினர் குறித்த இடத்தில் பாதுகாப்புக் கடமைகளுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.



No comments: