News Just In

8/27/2021 02:59:00 PM

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண கொரோனா தொற்றிலிருந்து பூரண குணமடைந்தார்...!!


கொவிட் தொற்றுக்கு உள்ளான நிலையில் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் காவல்துறை ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண பூரண குணமடைந்துள்ளார்.

சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹணவை எமது செய்திப்பிரிவு தொலைபேசி ஊடாக தொடர்புகொண்டபோது, தான் தற்போது பூரண குணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.

இன்னும் சற்றுநேரத்தில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறி வீடுசெல்லவுள்ளதாக அவர் தெரிவித்தார். கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தருணத்திலிருந்து விரைவாக குணமடைய பிரார்த்தித்த அனைவருக்கும் அவர் நன்றி கூற மறக்கவில்லை.

மேலும் போலி புகைப்படங்களைப் பயன்படுத்தி, தான் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக சமூகவலைதளங்களில் பிரசாரம் செய்தவர்கள் தொடர்பில் கவலையடைவதாகவும் அவர் கூறினார்.

எமது செய்தி பிரிவிடம் தொடர்ந்தும் பேசிய சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண, தொற்று ஆளாகியுள்ளதாக உணர்ந்த முதல் சந்தர்ப்பத்திலேயே சிகிச்சை பெறுவது மிக கட்டாயமானது என்றும் கூறினார்.

அதனை தான் செய்ததன் காரணமாகவே தான் இன்று நல்லாரோக்கியத்துடன் வீடு திரும்புவதாகவும், நோயை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் அவர் கூறினார். மேலும் இரண்டு வாரங்கள் வீட்டில் ஓய்வெடுத்த பிறகு தனது பணிகளை மீண்டும் தொடங்குவதாக அவர் தெரிவித்தார்.

No comments: