(எப்.முபாரக்)
திருகோணமலை மாவட்டத்தில் தனிமைப்படுத்தலில் இருக்கும் பொது மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் இரண்டாயிரம் முகக்கவசங்கள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிக்கோரலவிடம் அலுவலகத்தில் வைத்து இன்று(27) வழங்கி வைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்தும் நோக்கில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இதனை முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் அதிகாரியான முகம்மட் சலிம் அரசாங்க அதிபரிடம் வழங்கி வைத்தார்.
இதில் முஸ்லிம் எயிட் வெளிக்கள அதிகாரி ஏ.எம்.ரமீஸிம் கலந்து கொண்டார்.
No comments: