News Just In

8/22/2021 08:00:00 PM

மின்னல் தாக்குதலால் வீட்டுக்கு பலத்த சேதம்- மின் உபகரணங்கள் முற்றாக பாதிப்பு மின்சாரமும் துண்டிப்பு...!!



(ஹஸ்பர் ஏ ஹலீம்)
இரண்டு நாட்களாக ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களில் மின்னலுடன் கூடிய கணத்த மழை பெய்து வருகின்றது.

இந் நிலையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் காக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் மின்னல் தாக்கி வீடு ஒன்று சேதமடைந்துள்ளது.

நேற்று இரவு (21) 7.00 மணியளவில் தாக்கிய மின்னல் காரணமாக வீட்டின் மின்சார சுற்று, இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் மின்சாரச்சுற்று இருந்த சுவர்பகுதியும் கூரைப்பகுதியும் வெடிப்புக்குள்ளாகி முற்றாக சேதமடைந்துள்ளதாக வயது முதிர்ந்த கணவன், மனைவி தெரிவிக்கின்றனர்.

வீட்டில் உள்ளவர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை எனவும் தெரியவருகின்றது.இருந்த போதிலும் தாங்கள் உயிர் தப்பியதாகவும் கண்ணீர் வடிக்கின்றனர்.

குறித்த வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு எந்தவிதமான மின்சார உபகரணங்களும் இயங்கவில்லை எனவும் பழுதடைந்துள்ளதாக மேலும் தெரிவிக்கின்றனர். பகுதியளவில் பலத்த சேதங்களுக்கு உள்ளான வீட்டுச் சுவர் ,மின்சார உபகரணங்களை பெறுவதற்கான நடவடிக்கைகளை துரியமாக பெற்று தருமானு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கின்றனர்.








No comments: