News Just In

8/24/2021 08:04:00 PM

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை வலுக்கட்டாயமாக குறைக்கும் எண்ணம் இல்லை...!!


கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அரசு அல்லது தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை வலுக்கட்டாயமாக குறைக்கும் எண்ணம் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும, ஒரு அமைச்சரால் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், இது தொடர்பான எந்த முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றார்.

எனவே அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து கொவிட்-19 நெருக்கடியை சமாளிக்க ஒரு நிதி திட்டத்தை உருவாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக வெளியான ஊடக அறிக்கைகளை வன்மையாக நிராகரிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments: