News Just In

8/21/2021 06:54:00 AM

ஒரேநாளில் 195பேர் உயிரிழப்பு- எச்சரிக்கும் வைத்திய நிபுணர்கள்...!!


நாட்டில் கொவிட் தொற்றின் தீவிர தன்மை சடுதியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேல் மாகாணத்தில் டெல்டா தொற்றின் பரவலும் சடுதியாக அதிகரிப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது டெல்டா வைரஸின் ஆரம்பகட்டம் மாத்திரமே என்றும் , அதன் முழுப்பரவலின் சக்தியை 5 வாரங்களின் பின்னரே முழுமையாக உணர முடியும் என்றும் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

நாளுக்கு நாள் படிப்படியாக கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்றைய தினமும் 195 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.


No comments: