News Just In

7/16/2021 02:32:00 PM

தம்பலகாமத்தில் பல வீதிகள் கபார்ட் வீதியாக ஆரம்பித்து வைப்பு...!!


(எப்.முபாரக்)
ஜனாதிபதியின் ஒரு இலட்சம் காபர்ட் கிலோ மீற்றர் திட்டத்தின் கீழ் தம்பலகாமம் பிரதேசத்தில் பல வீதிகள் புனரமைப்புப் பணிகள் இன்று (16) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ் வீதி புனரமைப்பு பணியினை தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் ஏ.ஜீ..சம்பிக பண்டார ஆரம்பித்து வைத்தார்.

இதன் பிரகாரம் பாத்திமா பாடசாலை வீதி, திஸ்ஸபுர பன்சல வீதி,சாலியபுர பெரகும்புர வீதி ஆகியவற்றின் வேலைகள் ஆரம்பத்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச சபை உறுப்பபினர்களான றசீன் கான் மற்றும் எம்.ஐ. றிகாஸ் அஹமட் , வழுதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து சிறப்பித்தனர்.

No comments: