News Just In

7/17/2021 07:14:00 AM

அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை உள்ளிட்ட சில கிராம சேவகர் பிரிவுகள் விடுவிப்பு...!!


நாட்டில் மேலும் 4 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள் இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் கேகாலை, இரத்தினபுரி, அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களிலுள்ள ஐந்து கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, கேகாலை மிஹிபிட்டி கிராம சேவகர் பிரிவின் மாதெய்யாவ கிராமமும்

இரத்தினபுரி மாட்டுவாகல தோட்டத்தின் மேல் பிரிவும்

அம்பாறை மருதமுனை (3) கிராம சேவகர் பிரிவும்

கண்டி சுதுஹம்பல மேற்கு கிராம சேவகர் பிரிவின் விஹார விஹார வீதி, கப்பர தேவாலய வீதி, வெலமெத பாரகம பகுதியும், சுதுஹம்பல கிழக்கு கிராம சேவகர் பிரிவின் விஹார வீதி, கப்பர தேவாலய வீதியும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.


No comments: