News Just In

7/16/2021 07:34:00 PM

மட்டக்களப்பு- சந்திவெளி பகுதியில் வெடிபொருள் மீட்பு...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி ஆற்றங்கரை பகுதியில் இருந்து கைவிடப்பட்ட வெடிபொருள் ஒன்றை இன்று வெள்ளிக்கிழமை (16) மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சம்பவதினமான இன்று பகல் சந்திவெளி பிள்ளையார் ஆலய வீதியிலுள்ள ஆற்றங்கரை பகுதியில் இருந்து வெடிபொருள் ஒன்றை பொலிசார் மற்றும் இராணுவத்தினர் இணைந்து மீட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.



No comments: