இன்று மாலை பொதுமக்களின் தகவலின் அடிப்படையில் சீலாமுனை வாவிக் கரையில் சுமார் 4 அடி நீளமான டொல்பின் ரக மீன் கரை ஒதுங்கியுள்ளது.
மட்டக்களப்பு முகத்துவாரத்தனை அண்டியுள்ள பகுதியிலேயே இந்த டொல்பின் ரக மீன் மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்களதிற்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மைக்காலமாக மட்டக்களப்பு கடற்கரைப் பகுதியில் திறந்த நிலையில் ஆமை மீன்கள் கரை ஒதுங்கி வரும் நிலையில் முகத்துவாரத்தில் உள்ள பாவி பகுதியில் டொல்பின் ரக மீன் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments: