மட்டக்களப்பு திருப்பெருந்துறையினை மையப்படுத்தியதாக நடைபாதை, மற்றும் பொழுது போக்கு அம்சங்களை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான கள விஜயம்.
நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தினை அழகு படுத்தும் முகமாக பல திட்டங்களை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் புதன்கிழமை (29) திருப்பெருந்துறையினை மையப்படுத்தி நடைபாதை மற்றும் உடற்பயிற்சி சாதனங்களுடன் கூடிய பொழுதுபோக்கு அம்சங்களை உள்ளடக்கிய நகர அபிவிருத்தி திட்டம் ஒன்றினை மேற்கொள்வதற்கான திட்டமிடலுக்கான களவிஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் இத்திட்டத்தின் மூலமாக இவற்றை பயன்படுத்தும் மக்கள் உடல் மற்றும் உள ஆரோக்கியம் மிக்க வளமான சமூகமாக எதிர்காலத்தில் வலுப்பெறவேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்நிகழ்வின் போது பிரதேச செயலாளர் வாசுதேவன் மற்றும் நகர அபிவிருத்தி திட்டமிடல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments: