குறித்த 2 கிலோமீட்டர் நீளமான கொங்கிறீட் வீதியானது கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க வீதி பெருந்தெருக்கள் அமைச்சின் கீழ் பா.உ சந்திரகாந்தன் அவர்களின் சிபாரிசில் அமைக்கப்பட்டுள்ளது இதனையடுத்து இன்றைய தினம் குறித்த வீதியானது மக்களின் பாவனைக்கு திறந்து விடப்பட்டது.
குறித்த இந்த விதியானது முன்னர் களிமண்ணினால் காணப்பட்ட போது மக்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் சென்று கொண்டிருந்தனர் இந்த நிலையில் இன்று எதுவித சிரமமும் இன்றி மக்கள் பயணிக்ககூடிய வகையில் இந்த வீதி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாண பணிப்பாளர் சிவகுமார், பிரதம பொறியியலாளர் பரதன், மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் சுதாகரன், ஒப்பந்தக்காரர் செல்வராசா, கிராமிய குழுக்களின் பிரதிநிதிகள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
No comments: