இன்று (16) மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிமனையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மட்டக்களப்பு மக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணி இந்தத் கொரோனா தொற்றில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
நேற்றைக்குமுன் தினம் மட்டக்களப்பு மாமாங்கம் பகுதி 21 நாட்களுக்குப் பின்னதாக விடுவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் 44 தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளங்
காணப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பில் இதுவரை 7485 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதில் 106 பேர் உயிரிழந்துள்ளதாகவும். மூன்றாவது கொரோனா அலையில் மாத்திரம் 6502 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் இதில் 97பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, களுதாவளையில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் 34 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக குறித்த இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள 07 கொரோனா வைத்தியசாலைகளில் இதுவரை 6075 கொரோனா தொற்றாளர்கள் அனுமதிக்கப்பட்டு 5351பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் 10பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் 69531 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் இரண்டாவது தடவையாக 19800பேருக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments: