மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவில் 1996 ஆண்டு கட்டப்பட்டு இயங்கி வரும் பழைமையான கிராமிய வைத்தியசாலையினை புனரமைப்பு செய்து தருமாறு அப்பிரதேச மக்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைய கிழக்குமான சுகாதார சேவைகள் திணைக்களத்தின் 4.2 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது.
புனரமைப்பு செய்யப்படுகின்ற வைத்தியசாலையினை இராஜாங்க அமைச்சர் எஸ் .வியாழேந்திரன், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் , பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அச்சுதன், மாவட்ட திட்டமிடல் வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் .சசிகுமார் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர்.
No comments: