News Just In

7/01/2021 08:17:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடல்...!!


மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று(01.07.2021) வியாழக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது.

குறித்த கலந்துரையாடலானது சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டக்களப்பு மாநகர முதல்வர் சரவணபவன், மாவட்ட செயலக உயரதிகாரிகள் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட சுற்றுலா விடுதிகளின் உரிமையளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.









No comments: