காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசியத்தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரோடு இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் போதைப்பொருளும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தொகையும் கைப்பற்றப்பட்டது.
அத்தோடு தமது அடையாள அட்டைகளை வழங்கி போதைப்பொருளை கடனாகப் பெற்றுக் கொண்டோரின் அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட அடையாள அட்டைகளின்படி மேலும் பலரைக்கைது செய்யும் நடவடிக்கைகளை வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து காகித ஆலை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.
அதே நேரம் குறித்த வீட்டில் கடந்த வருடம் 16 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்ட இளைஞனின் உறவினரும் கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: