News Just In

7/16/2021 06:39:00 AM

கிராம சேவகர் பதவிக்கான விண்ணப்பம் ஜூலை மாதம் 19ஆம் திகதியுடன் நிறைவு- விண்ணப்பிக்க...!!


கிராம உத்தியோகத்தர் பதவிக்கான விண்ணப்ப முடிவுத் திகதி எதிர்வரும் ஜூலை மாதம் 19ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது..இது தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் நாட்டில் நிலவும் தொற்று நிலைமை காரணமாக குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பயணத் தடை காரணமாக பல்வேறு நபர்களுக்கு 15ஆம் திகதிக்கு பின்னரே விண்ணப்பிக்கும் வாய்ப்பு கிடைக்கும் எனும் காரணத்திற்காக இந்த மாற்றம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்ணப்ப முடிவுத் திகதி நீட்டிக்கப்பட்ட போதிலும் தகைமைகளை பூர்த்தி செய்யவேண்டிய திகதி ஜூன் மாதம் 28ஆம் திகதி 2021 என்ற திகதியில் எந்த மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Online  மூலமாக விண்ணப்பிக்க விரும்புவோர்- https://applications.doenets.lk/exams

விண்ணப்ப படிவம் மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர்- https://drive.google.com/file/d/1yD7kIZ7dd8TAOHxA6r0Gc0Lh5YDfBB6K/view

No comments: