News Just In

6/09/2021 05:16:00 PM

பொலிஸ் அதிகாரிகள் எனக்கூறி பணமோசடி- தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மக்களுக்கு எச்சரிக்கை...!!


பயங்கரவாத விசாரணைப் பிரிவு அல்லது குற்றவியல் விசாரணைத் திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி பொலிஸ் அதிகாரிகள் என தம்மை அடையாளப்படுத்தி ஏற்படுத்தப்படும் தொலைபேசி அழைப்புகள் தொடர்பாக மிகவும் அவதானமாக இருக்குமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இந்த அழைப்பினூடாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், இது தொடர்பாக அவர்களிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறி, அழைப்பவர்களிடமிருந்து பணமோசடியொன்று மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

No comments: