News Just In

6/22/2021 01:43:00 PM

தென்கிழக்கு பல்கலையின் புதிய உபவேந்தராக பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்...!!


(நூருல் ஹுதா உமர்)
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக புதிய உபவேந்தராக கலை, கலாச்சார பீடத்தின் தற்போதைய பீடாதிபதி சாய்ந்தமருதை சேர்ந்த பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தராக இளம் வயதில் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் இவர் அதே பல்கலைக்கழகத்தின் மாணவராவார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவுக்குழுவின் பேரவைக்குழுவிற்கு தெரிவுக்குழுவினால் சமர்ப்பித்த பட்டியலில் முதலாம் இடத்தை இவர் தக்கவைத்திருந்தார் என்பதுடன் இவர் எதிர்வரும் ஆகஸ்ட் 09 ஆம் திகதி தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: