News Just In

6/08/2021 05:39:00 PM

திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை...!!


கொவிட் வைரசிற்கு எதிராக ஏற்றப்படும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்திற்கு முதல் கட்டமாக 25000 சைனோபாம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதாகவும் குறித்த தடுப்பூசிகள் இன்று தொடக்கம் மாவட்டத்தின் பல சுகாதார சேவை பணிமனை பிரதேசங்களில் ஏற்றப்பட்டு வருவதாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் செயலணியின் தலைவருமாகிய சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

சுகாதாரத்துறையினர் குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதுடன் மக்களும் குறித்த தடுப்பூசியை ஆர்வத்துடன் பெற்றுக்கொள்ள வருகை தருவதையும் அவதானிக்க முடிந்தது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தடுப்பூசி ஏற்றல் தொடர்பான சுற்றுநிறுபத்தினடிப்படையில் முன்னுரிமை வழங்கப்பட்டவர்களுக்கே இத்தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.







No comments: