News Just In

6/22/2021 03:55:00 PM

மட்டக்களப்பு- கோறளைப்பற்று மத்தி பிறைந்துறைச்சேனையில் மூன்று வீதிகள் முடக்கம்...!!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை 206சி கிராம அதிகாரி பிரிவில் மூன்று வீதிகள் இன்று செவ்வாய்க்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனப்படுத்தப்படுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி குழுவினால் கோரியதற்கிணங்க தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.

கோறளைப்பற்று மத்தி பிரதேச பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை 206சி கிராம அதிகாரி பிரிவில் முதலாம் குறுக்கு, இரண்டாம் குறுக்கு மற்றும் அப்துல்லாஹ் குறுக்கு வீதி ஆகிய மூன்று வீதிகளில் அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து மறு அறிவித்தல் வரை குறித்த மூன்று வீதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலணி குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கோறளைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள், வாழைச்சேனை பொலிஸார், வாழைச்சேனை பிரதேச சபையினர், கிராமமட்ட குழுவினர் ஆகியோர் இணைந்து குறித்த மூன்று வீதிகளுக்கு தடையினை போட்டு பாதுகாப்பு நடவடிக்கை பலப்;படுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை குறித்த மூன்று வீதிகள் தனிமைப்படுத்தல் அமுலில் இருக்கும் என்பதோடு பொது மக்கள் வீடுகளிலேயே இருக்குமாறும் பொதுமக்களுக்கு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரி.நஜீப்கான் தெரிவித்தார்.













No comments: