News Just In

6/22/2021 11:11:00 AM

திருகோணமலை- வெருகல் பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு...!!


(வெருகல் நிருவர் ரதுஜன்)
திருகோணமலை மாவட்டத்தின் வெருகல் பகுதியிலுள்ள ஈச்சிலம்பற்று பகுதியில் புதிய பொலிஸ் நிலையம் நேற்று(21)திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கையாக இருந்த வெருகலுக்கான தனிப் பொலிஸ் நிலையம் வேண்டும் என்ற கோரிக்கை இதன் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் வெருகல் மக்கள் பல கிலோமீற்றர் தூரம் சென்று சேருனுவர பொலிஸ் நிலையத்திலேயே தங்களது முறைப்பாடுகளை தெரிவித்து வந்ததோடு இவர்களுக்கான பொலிஸ் நிர்வாகமாக சேருனுவர பொலிஸ் நிலையமே காணப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் முன்னிலையில் குறித்த பொலிஸ் நிலையமானது திறந்துவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.






No comments: