News Just In

6/05/2021 06:37:00 PM

மட்டக்களப்பு- மண்முனைப் பற்றில் 5000 ரூபா கொடுப்பனவு திருப்திகரமாக வழங்கப்படுகின்றது...!!


( மட்டக்களப்பு முஹமட் தஸ் ரீப்)
பயணத் தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு அரசினால் வழங்கப்பட்டு வரும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றிகரமாக அமுல் நடத்தப்பட்டு வருகின்றது.

இதற்கமைய மட்டக்களப்பு மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவில் பயணத் தடை காரணமாக ஜீவனோ பாயத்தை இழந்துள்ள சுமார் 6 ஆயிரத்து 225 குடும்பங்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு திருப்திகரமாக வழங்கப்பட்டு வருகின்றது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி சத்யானந்தி நமச்சிவாயம் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவினர் வீடு வீடாகச் சென்று இந்த கொடுப்பனவை வழங்கி வருகின்றனர்.

இதேவேளை இம்மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சுமார் 99ஆயிரம் குடும்பங்களுக்கு இந்த 5000 ரூபா கொடுப்பனவுகள் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரனின் வழிகாட்டுதலில் அவ்வப்பகுதி பிரதேச செயலாளர்களின் தலைமையில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


No comments: