News Just In

6/05/2021 06:24:00 PM

இலங்கையில் 02 இலட்சத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்- மக்களை அவதானமாக செயற்படுமாறு எச்சரிக்கை...!!


இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2,280 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று இரண்டு இலட்சத்தை கடந்தது.

அதற்கமைய, நாட்டில் இதுவரையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 201,534ஆக உயர்வடைந்துள்ளது.

கொரோனா தொற்று நிலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் மக்கள் பயானிக்கட்டுப்பாடுகளை சரியான முறையில் கடைப்பிடித்து சுகாதார துறையினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் பூர்ண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொல்லப்படுகின்றனர்.

No comments: