News Just In

6/08/2021 08:12:00 AM

பைசால் காசிமின் முயற்சியின் கீழ் நிந்தவூர் கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 30 இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கி வைப்பு...!!


நூருல் ஹுதா உமர்
முன்னாள் சுகாதாரத்துறை இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காசிம் அவர்கள் சுகாதார அமைச்சரிடம் விடுத்த அவசர வேண்டுகோளை அடுத்து அவசர சிகிச்சைபிரிவுக்கு தேவையான உபகரணங்கள் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு 10 வகையான மருத்துவ உபகரணங்கள் இன்று (07) நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அமையப்பெற்றுள்ள கொரோனா தடுப்பு சிகிச்சை நிலையத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர் டாக்டர் மாஹிர், நிந்தவூர் பிரதேச செயலாளர், நிந்தவூர் ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட சுகாதார முக்கிய அதிகாரிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.






No comments: